BREAKING: காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு - பொதுமக்கள் பலர் பலி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

BREAKING: காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு - பொதுமக்கள் பலர் பலி?

BREAKING: காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு - பொதுமக்கள் பலர் பலி?



காபூலில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏராளமான பொதுமக்கள் பலியாகினர்
ஆப்கானிஸ்தானில், மசூதி அருகே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொது மக்கள் பலர் பலியாகினர். இந்த தகவலை தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள், எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலைப் படையை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் வகையில், தற்கொலைப் படைக்கு லஷ்கர் - இ - மன்சூரி (மன்சூர் ராணுவம்) என்று பெயரிடப்பட்டு, நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி தெரிவித்திருந்தார்.ருத்ர தாண்டவம் திரைப்படம் : இது அரசியில் பிரமுகர்களின் திரைவிமர்சனம்
இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் நுழைவாயில் அருகே இன்று பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பொது மக்கள் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.குண்டு வெடிப்பு சம்பவத்தை தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தி உள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தில், எத்தனை பேர் உயிரிழந்தனர்; எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


No comments:

Post a Comment

Post Top Ad