தலைநகர் சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 19, 2021

தலைநகர் சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

தலைநகர் சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!




சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட இன்று புதிதாக, 610 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 361 பேர் ஆண்கள். 249 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 39 ஆயிரத்து 806 ஆக அதிகரித்து உள்ளது.

தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 129 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று 125 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று, 129 ஆக சற்று அதிகரித்து உள்ளது. கோவை மாவட்டத்தில், நேற்று 101 ஆக இருந்த பாதிப்பு, இன்று 95 ஆக குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் தனியார் மருத்துவமனைகளிலும், 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 680 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று மட்டும் 682 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 95 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 7 ஆயிரத்து 270 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad