பால்கனியில் துணி காய போடக் கூடாது: அரசு அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 28, 2021

பால்கனியில் துணி காய போடக் கூடாது: அரசு அதிரடி உத்தரவு!

பால்கனியில் துணி காய போடக் கூடாது: அரசு அதிரடி உத்தரவு!


பால்கனியில் துணி காய போடக் கூடாது என்று துபாய் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
துபாய் என்ற பெயரை கேட்டதுமே உயரமான, ஆடம்பரமான கட்டிடங்கள், மால்கள், இரவு வாழ்க்கை ஆகியவை நினைவுக்கு வரும். ஐக்கிய அரபு நாடான துபாய் சுற்றுலாவுக்கும் பெயர் போனது. துபாய் மன்னரும் அந்நாட்டை சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்ததாக மாற்ற முனைப்பு காட்டி வருகிறார். எண்ணையை மட்டும் நம்பி இருக்காமல், எதிர்காலத்தில் துபாயை ஒரு வர்த்தக நாடாக மாற்றுவதே அந்நாட்டு மன்னரின் திட்டம் என கூறப்படுகிறது.

வர்த்தக மையமாகவும், சுற்றுலாவுக்கு உகந்த நாடாகவும் துபாயை மாற்றி அனைவரையும் ஈர்க்க வேண்டும் என்றால், சுகாதாரம், தூய்மை உள்ளிட்டவைகள் முக்கியம். அதன்பொருட்டு பல்வேறு விஷயங்கள் துபாயில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், துபாயில் வசிப்பவர்கள் நகரம் முழுவதும் அழகியல் தோற்றத்தை பராமரிக்க வேண்டும் எனவும், தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளின் பால்கனிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் துபாய் நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

குடியிருப்புவாசிகள் தங்கள் பால்கனிகளை தவறாகப் பயன்படுத்தி அதன்மூலம் சமூகப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பளிக்க கூடாது. பிறருடைய கண்களை உறுத்தும் விதத்தில் பால்கனிகள் அமையக்கூடாது என்று தெரிவித்துள்ள துபாய் நகராட்சி நிர்வாகம், இதுதொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அந்நாட்டில் ஏற்கனவே இருக்கிறது என்றபோதிலும், மீண்டும் ஒரு முறை அதனை துபாய் நகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, “பால்கனியில் துணியை காயப்போடுதல் கூடாது. சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது. பால்கனியில் இருந்து குப்பைகளை வீசக் கூடாது. பால்கனியை கழுவும்போது அந்த அழுக்கு தண்ணீர் வெளியே வர கூடாது. பறவைகளுக்கு பால்கனியில் உணவளிக்க கூடாது. பால்கனியில் தொலைக்காட்சி ஆன்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறினாலோ பால்கனிகளை தவறாகப் பயன்படுத்தினாலோ அந்நாட்டு மதிப்பில் 500 முதல் 1,500 திர்ஹாம் வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசிசத்தை வேரறுப்பதற்கு கைகோர்த்து நிற்போம் - திருமாவளவன் உறுதி

நிலையான சுற்றுச்சூழலுக்கான தேவைகள் மற்றும் தரநிலைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், நகரத்தின் பொதுவான அழகியல் மற்றும் நாகரீக தோற்றத்தை சிதைப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு வாசிகளை துபாய் நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad