தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? அமைச்சர் சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 27, 2021

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? அமைச்சர் சொன்ன தகவல்!



தமிழ்நாட்டில் ஊரடங்கு எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கிவைத்தார். அப்போது ஊரடங்கு குறித்தும் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் சிறப்பு 'டேட்டா செல்' என்ற செயலியும் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஓமைக்ரான் அறிகுறி உள்ளது. ஓமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமைக்ரான் பரிசோதனை முடிவுகள் ஒன்றிய அரசிடம் இருந்து வருவது தாமதமாகிறது. டிசம்பர் 31ம் தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பிறகு தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

“மருத்துவமனைகளில் உள்ள நிலவரங்களை டேட்டா செல் ஆப் மூலம் அறிய முடியும். புதிய தரவு மையத்தின் மூலம் தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவத் துறையுடன் தொடர்பு கொள்ள முடியும். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலகத்தை 10 நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

தமிழ்நாட்டில் அமையவுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும். இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கும்

மே மதத்துக்கு பிறகு 77 இடங்களில் சித்த மருத்துவ கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டன. முதல் மற்றும் 2வது கொரோனா அலையின்போது இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad