சத்தியமூரத்தியின் நிலையை பார்த்து கதறி அழும் குடும்பத்தினர்: குற்றவுணர்வில் கோபி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 30, 2022

சத்தியமூரத்தியின் நிலையை பார்த்து கதறி அழும் குடும்பத்தினர்: குற்றவுணர்வில் கோபி..!

சத்தியமூரத்தியின் நிலையை பார்த்து கதறி அழும் குடும்பத்தினர்: குற்றவுணர்வில் கோபி..!


பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
கோபியின் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரால் பேச முடியாது ஒரு கை கால் செயல்படாது என்று கூறுகின்றனர். இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
நேத்து பிபி அதிகமாக இருக்கும் போதே நான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்து இருக்கனும். நான் அப்படியே விட்டு இருக்கக்கூடாது கண்கலங்கி அழுகிறார். ‌‌ தன்னுடைய மாமனார் தனக்காக செய்த உதவிகள் குறித்து யோசித்து பார்த்து பாக்கியா கதறி அழுகிறாள். அனைவரும் வெளியில் நின்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஈஸ்வரி, ஜெனி மற்றும் இனியா மருத்துவமனைக்கு வருகின்றனர்.

பிறகு அனைவரும் உள்ளே சென்று பார்க்கின்றனர். சத்தியமூர்த்திக்கு பக்கவாதம் பேச்சு வராது ஒரு பக்கம் கை கால் செயல் படவில்லை என்பதை கேள்விப்பட்டு ஈஸ்வரி கதறி அழுகிறாள். இனியாவும் 'தாத்தா தாத்தா' என அழுகிறாள். பாக்கியா தன்னுடைய அத்தையை மாமாவுக்கு சீக்கிரம் சரியாகிவிடும் அழுகாதீங்க என சமாதானம் செய்கிறாள். கோபி உள்ளே இருந்து வெளியே சென்று என்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை என வருத்தப்படுகிறான்.

அனைவரும் வீட்டிற்கு கிளம்பி விட பாக்கியா மட்டும் அவருடைய மாமனாருடன் இருக்கிறார். அவர் கண் முழித்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் போது கோபி கையில் மருந்து மாத்திரையுடன் உள்ளே வர அவனை பார்த்த சத்தியமூர்த்தி கோபப்படுகிறார். உடனே கோபி பயத்தில் எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பறேன் என அங்கிருந்து கிளம்பி விடுகிறான். இரவில் ஈஸ்வரி கல்யாணம் ஆனா புதிதில் இருந்து சத்தியமூர்த்தியுடன் இருந்தது பற்றி பாக்யாவிடம் சொல்லி வருத்தப்படுகிறாள்.

மறுநாள் காலையில் எழில் மற்றும் செழியன் தாத்தாவுடன் மருத்துவமனையில் இருக்கின்றனர். எழில், நாளைக்கு வீட்டுக்கு போய்டலாம் அங்கிருந்து தான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப் போறோம். எனக்கு நாலு நாள்தான் சூட்டிங் அதுக்கப்புறம் மொத்தமா முடிஞ்சிடும். என்னோட படத்தை நீங்க தியேட்டர்ல வந்துதான் பாப்பீங்க. அதுவும் எப்படி நடந்து வருவீங்கன்னு சொல்லட்டுமா என அதே போல் நடந்து காட்டுகிறான். பிறகு இளையராஜா பாட்டை போட்டு தாத்தாவை தூங்க வைக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad