பொங்கல் தொகுப்பு இல்லை… ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

பொங்கல் தொகுப்பு இல்லை… ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்!


பொங்கல் தொகுப்பு இல்லை… ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்!


சேலத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

பொங்கல் விழாவை தமிழக மக்கள் கொண்டாடி மகிழ்ந்திட அரிசி, சர்க்கரை, வெல்லம், நெய் உள்ளிட்ட 21 வகை பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் சேலம் பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, அல்லிக்குட்டை, வீராணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்காக காலை முதலே காத்திருந்தனர்.

ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெகுநேரமாகியும் இயந்திரத்தில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான சேவை இயங்காததால் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு நியாய விலை கடை களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மதியம் இரண்டு மணிக்கு மேல் ஒரு சில கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது மீதமுள்ளவர்களுக்கு நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் செய்வதறியாமல் தவித்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் போனதாக பொதுமக்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad