இரு மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றும் ஆளுநர்… ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறும் முன்னாள் முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 25, 2022

இரு மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றும் ஆளுநர்… ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறும் முன்னாள் முதல்வர்!

இரு மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றும் ஆளுநர்… ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறும் முன்னாள் முதல்வர்!


ஒரு ஆளுநராக இருப்பவர்கள் பரந்த மனதோடு, முதலமைச்சர் கொடியேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு புதுச்சேரியை உதாசீனப்படுத்துவதாகவும், அரசு நிர்வாகம் முழுவதையும் ஆளுநரிடம் கொடுத்துவிட்டு முதலமைச்சர் ரங்கசாமி வேடிக்கை பார்த்து ஒரு டம்மி அரசாங்கமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் ஆள லாயக்கற்ற முதலமைச்சர் என மக்கள் தீர்மானித்து விடுவார்கள் எனவும் கூறினார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இந்திய சரித்திரத்தில் எங்கேயும் ஒரு ஆளுநர், இரண்டு மாநிலத்திற்கு ஒரே நேரத்தில் தேசிய கொடியேற்றி சம்பவம் நடந்தது இல்லை.
துணைநிலை ஆளுநர் என்ற முறையில், புதுச்சேரியில் கொடியேற்ற, தமிழிசை சவுந்தரராஜனுக்கு உரிமை உள்ளது. ஆனால், தெலுங்கானாவில் ஆளுநராகவும், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகவும் கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

புதுச்சேரியில் மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளதாகவும், எனவே முதலமைச்சர் கொடியேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை, உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று, முதலமைச்சர் ரங்கசாமி கொடியேற்றி இருக்கலாம் என்றார்.

மேலும், இரண்டு இடத்திலும் கொடியேற்றுவது புதுச்சேரி மக்களுக்கு கசப்பான ஒன்றாகும். ஒரு ஆளுநராக இருப்பவர்கள் பரந்த மனதோடு முதலமைச்சர் கொடியேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆனால், அவர் அதை தவறவிட்டு விட்டார் என்றார். அதிகார போதை, எல்லா அதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தை அவர்கள் துச்சமென நினைப்பதாகவும், மாநில மக்கள் பற்றி கவலை இல்லை என்று கூறிய நாராயணசாமி, முதலமைச்சர் கொடியேற்ற மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிப்பது மட்டுமல்லாமல் உதாசீனமாக பார்க்கிறார்கள் என்றார்.

துணைநிலை ஆளுநர் தமிழசை சவுந்தர்ராஜன், புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், நிர்வாகத்தை தன்னிச்சையாக செய்து வருகிறார் என குற்றம்சாட்டியது மட்டுமல்லாமல் அதை நிரூபிக்கவும் தயாராக உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். தேவையான நிதியை பெறவும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில வளர்ச்சியை பின்னே தள்ளி, நாங்களும் ஆட்சி செய்கிறோம் என்பதற்காக நிர்வாகம் முழுவதையும் துணைநிலை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு முதலமைச்சர் வேடிக்கை பார்த்து உட்கார்ந்து கொண்டுள்ளார்.
முதலைமைச்சர் தனது அதிகாரத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று கூறிய அவர், இது ஒரு டம்மி அரசாக செயல்படுகிறது.

ஒரு அரசு நிர்வாகம் நடப்பதாக தெரியவில்லை என்றும், இப்படி ஒட்டுமொத்த அரசாங்கமும் சீரழிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் புதுச்சேரி மாநிலத்தை ஆள லாயக்கற்ற முதலமைச்சர் என மக்கள் தீர்மானித்து விடுவார்கள்.

ஆகவே, இனிமேலாவது முதலமைச்சர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து வெளியே வந்து புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad