முதல்வருக்கு மரியாதை இல்லை...கொந்தளித்த மூத்த அமைச்சர்... ஆடிப்போன திமுக எம்எல்ஏக்கள்!
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மூத்த அமைச்சரான எ.வ.வேலு சபையில் கொந்தளித்ததை கண்டு திமுக எம்எல்ஏக்கள் ஆடிப் போய் உள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6,7) நடைபெற்றது, முன்னதாக, சம்பிரதாய முறைப்படி ஆளுநர் ஆர்.என். ரவி சபையில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 5) உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு பின் அண்மையில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், அவை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே புதன்கிழமை மாலை 6 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எலஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், நீட் தேர்வு, கொரோனா உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சியினர் சபையில் எழுப்பும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பன உள்ளிட்டவை குறித்து எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்களை அளித்ததாக தெரிகிறது.
No comments:
Post a Comment