புதுவையில் புதிய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

புதுவையில் புதிய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுவையில் புதிய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?



புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 655 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 3,967 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுவையில் 535 பேர், காரைக்காலில் 93, மாஹேவில் 27 பேர் என மொத்தமாக 655 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1,31,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,27,629 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,355 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1882 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் இதுவரை 8,93,365 பேர் முதல் தவணையும், 5,82,858 பேர் இரண்டு தவணைகளும் என 14 லட்சத்து 76 ஆயிரத்து 572 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 349 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியாகும்.
முழு ஊரடங்கு இல்லை, பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடையும் இல்லை… அரசு வெளியிட்ட புது உத்தரவு!
புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதேநேரத்தில் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad