நாளை மறுநாள் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

நாளை மறுநாள் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாளை மறுநாள் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!


கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பும் 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் போன்று தற்போது இல்லையென்றாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் சுணக்கம் காட்டக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மூத்த அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று முன் தினம் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கிளஸ்டர்களில் தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர கண்காணிப்பு தொடர வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கொரோனாவுக்கான சிகிச்சைகளை நிர்வகிக்கும் போது, கொரோனா அல்லாத சுகாதார சேவைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் அப்போது பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், பொது சுகாதாரம், மாநிலங்களில் நிலவும் கொரோனா சூழ்நிலைகள், உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த நிலையில், கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தின்போது, தடுப்பூசி செலுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கலாம் என தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad