உ.பி.,யில் ஒரு அண்ணாமலை: இதுக்குத்தான் விஆர்எஸ் கொடுத்தாரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 31, 2022

உ.பி.,யில் ஒரு அண்ணாமலை: இதுக்குத்தான் விஆர்எஸ் கொடுத்தாரா?

உ.பி.,யில் ஒரு அண்ணாமலை: இதுக்குத்தான் விஆர்எஸ் கொடுத்தாரா?


விருப்ப ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அரசு மூத்த அதிகாரிகள் பலரும் தங்களது பதவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. தங்களது பதவிக்காலத்தில் பாஜகவுக்கு நேர்மையாக இருந்ததால், பதவி விலகிய பின்னர் அவர்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ., ஆளுநர், மிகப்பெரிய கட்சிப் பதவிகளை பாஜக கொடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அந்த வகையில், ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். அவர் தற்போது தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக உள்ளார். இதேபோல், ஹர்தீப் சிங் பூரி, ஜெய்சங்கர், ஆர்.கே.சிங், ஏ.கே.ஷர்மா என்று அந்த பட்டியல் நீள்கிறது.

அந்த வரிசையில், விருப்ப ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங்கும் இணைந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ்வர் சிங் 10 ஆண்டுகள் உத்தரபிரதேச காவல்துறையிலும், 14 ஆண்டுகள் அமலாக்கத்துறையிலும் பணியாற்றியுள்ளார். அமலாக்கத்துறையில் பணியாற்றியபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு, அகஸ்டாவெஸ்ட்லென்ட் ஹெலிகாப்டர் கொள்முதல் விவகாரம், ஏர்டெல்-மேக்ஸிஸ், அம்ரபள்ளி ஊழல் என பல்வேறு விவகாரங்களை கையாண்டுள்ளார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் ரூ.4000 கோடிக்கும் அதிகமான அசையும், அசையா சொத்துக்களை முடக்கியுள்ளார். பல்வேறு அரசியல் வாதிகளை சிறைக்கு அனுப்பியுள்ளார்.

இதனிடையே, அமலாக்கத்துறை இணை இயக்குனர் பதவியில் இருந்து ராஜேஷ்வர் சிங் சமீபத்தில் விலகினார். மேலும், தனக்கு விருப்ப ஓய்வு வழங்கும்படி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து ராஜேஷ்வர் சிங்கிற்கு விருப்ப ஓய்வு அளித்து பணியில் இருந்து அவரை மத்திய அரசு விடுவித்தது.

விருப்ப ஓய்வு பெற்றதும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜேஷ்வர் சிங் பதிவிட்டுள்ளார்.

மேலும்,“உத்தரப்பிரதேச காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அமலாக்க இயக்குநரகத்தில் சுமார் 14 ஆண்டுகள் உயர் பதவிகளில் இருந்த நான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் பதினொரு வருடங்கள் உள்ளபோதும் விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். அதேசமயம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வையும், இதயத்தில் தேசத்திற்கான முழுமையான அர்ப்பணிப்பையும் நான் தொடர்ந்து உணர்கிறேன், இது அரசியல் என்று நான் நம்புகிறேன்.” என்றும் ராஜேஷ்வர் சிங் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, விருப்ப ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை இணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், பாஜகவில் இணையவுள்ளதாகவும், உத்தரப்பிரதேச தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர் அவர், அந்த தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad