விழுப்புரம் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

விழுப்புரம் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்!

விழுப்புரம் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்!



விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை வரும் 9-ம் தேதி விவசாய பாசனத்திற்காக திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் வீடூர் அணை கட்டப்பட்டுள்ளது. 32 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 605 மில்லியன் கன அடி நீர் சேமிக்க முடியும்.

வீடூர் அணை மூலம் தமிழகத்தில் சுமார் இரண்டாயிரத்து 200 ஏக்கர் மற்றும் புதுச்சேரியில் சுமார் ஆயிரம் ஏக்கர் என மூவாயிரத்து 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதனிடையே, வீடூர் அணையிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு (பசலி 1431) பாசனத்திற்கு 09.01.2022 முதல் 23.05.2022 வரை 135 நாட்களுக்கு, தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் ஆக மொத்தம் 3200 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் என பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad