வாரிசு சான்றிதழ் விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுக்கும் முக்கிய முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 22, 2022

வாரிசு சான்றிதழ் விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுக்கும் முக்கிய முடிவு!

வாரிசு சான்றிதழ் விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுக்கும் முக்கிய முடிவு!


இரண்டாம் நிலை வாரிசுதாரர்களுக்கான சான்றிதழை வழங்கும்படி தாசில்தார்களுக்கு உத்தரவிடுவது சரிதானா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு ஆராய வேண்டுமென தனி நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ் கோரி அளித்த விண்ணப்பங்களை நிராகரித்த சம்பந்தப்பட்ட தாசில்தார்களின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி வெங்கடாசலம் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ்களை தாசில்தார் வழங்க வேண்டும் என்றும், தாசில்தாருக்கு அதிகாரமில்லை என்றும் இரு வெவ்வேறு அமர்வுகள் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து வாரிசுரிமை சட்டப்படி, இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள், தங்கள் அடையாளத்தை நீதிமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்றும், வருவாய் துறை அதிகாரிகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினால், அது சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடுவதுடன், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad