பிரதமர் மோடி விசிட்.. நான் வரவேற்க மாட்டேன்.. தெலங்கானா முதல்வர் கேசிஆர் எடுத்த முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 4, 2022

பிரதமர் மோடி விசிட்.. நான் வரவேற்க மாட்டேன்.. தெலங்கானா முதல்வர் கேசிஆர் எடுத்த முடிவு!

பிரதமர் மோடி விசிட்.. நான் வரவேற்க மாட்டேன்.. தெலங்கானா முதல்வர் கேசிஆர் எடுத்த முடிவு!


பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்கப்போவதில்லை என தெலங்கானா முதல்வர் முடிவெடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு நடைபெறவுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
ஹைதரபாத் புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மோடி பங்கேற்கவுள்ளார். மேலும் சமத்துவத்துகான சிலையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், நாளை பிரதமர் மோடி ஹைதராபாத் வரும்போது அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்க செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மாநில பால்வளத்துறை அமைச்சர் டி.ஸ்ரீனிவாஸ் யாதவ் பிரதமர் மோடியை வரவேற்க செல்வார்.

வழக்கமாக பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வருகை தரும்போது அம்மாநில முதல்வர் நேரில் சென்று வரவேற்பது வழக்கம். ஆனால், அண்மைக்காலமாக பாஜகவுக்கும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.


பிரதமர் மோடி குறுகிய மனநிலை கொண்டவர் எனவும், நாடு வளர வேண்டுமென்றால் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி வங்கக் கடலில் வீச வேண்டுமெனவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சில தினங்களுக்கு முன் பேசினார்.

இதேபோல அண்மையில் அவர் பிரதமர் மோடியை குறிப்பிட்டு, “மேற்கு வங்கத்தில் தேர்தல் வரும்போது அவர் தாகூர் போல தாடி வைத்துக்கொள்கிறார். வேஷ்டி கட்டிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு செல்கிறார். பஞ்சாப் தேர்தலின்போது பகடி போட்டுக்கொள்கிறார். மணிப்பூர், உத்தராகண்டில் உள்ளூர் தொப்பியை போட்டுக்கொள்கிறார். இதெல்லாம் என்ன?” என்று கேள்வியெழுப்பினார்.

அவரது பேச்சு தெலங்கானா பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்க வேண்டாம் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad