இந்த ஊரில் யாரும் காரை லாக் செய்ய மாட்டார்களாம்... காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 3, 2022

இந்த ஊரில் யாரும் காரை லாக் செய்ய மாட்டார்களாம்... காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்...

இந்த ஊரில் யாரும் காரை லாக் செய்ய மாட்டார்களாம்... காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்...

பனிக்கரடி தாக்குதல் அபாயம் இருப்பதால் கனடாவில் உள்ள ஒரு ஊர் மக்கள் காரை லாக் செய்யாமல் சென்று வருகிறார். இதுகுறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்
உலகில் பல இடங்களில் பல விசித்திரமான பழக்கங்களை மக்கள் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாட்டிற்குள் உள்ள பாரம்பரியம், கலாச்சாரம், நம்பிக்கை என பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு இவ்வாறான பழக்க வழக்கம் என்பது இருக்கும். ஆனால் ஆனால் கனடா நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊரில் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கம் குறித்து தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

கனடா நாட்டில் உள்ள சர்ச்சில் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இங்கு உள்ள மக்கள் தங்கள் கார்களை ரோட்டில் பார்க் செய்துவிட்டு சென்றால் காரை லாக் செய்ய மாட்டார்களாம். எந்த பயமும் இல்லாமல் காரை லாக் செய்யாமலேயே சென்று விடுவார்களாம். நாம் எல்லோரும் காரை எங்கு நிறுத்தினாலும் லாக் செய்து விடுவோம் லாக் செய்யாமல் சென்றால் திருடி விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் அந்த ஊரில் உள்ள மக்களுக்கு அப்படியான எந்த பயமும் இல்லை.

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அந்த ஊரில் பனிகரடிகள் அதிகம் உலாவுமாம். உலகிலேயே அதிக பனிகரடிகள் உள்ள நகரம் அதுதான். பனிக்கரடிகளின் தலைநகரமாகவே திகழ்கிறது. அந்த பனிக்கரடிகள் தான் மக்கள் யாரும் காரை லாக் செய்யாமல் செல்வதற்கான காரணம். பனிக்கரடிகள் பார்க்க சாதுவாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான மிருகம். பனிக்கரடிகள் தாக்கி பல மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad