மாநாடு பட பாணியில் ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 5, 2022

மாநாடு பட பாணியில் ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

மாநாடு பட பாணியில் ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!


ஆணழகன் ஸ்டாலின் தான் வந்தாரு... போனாரு... ரிப்பீட்டு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் ஸ்டாலினை கலாய்த்துள்ளார்
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளது. மேலும், வருகிற மார்ச் மாதம் 4 ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் குப்பையைத்தான் கொடுத்தனர் என்று ஆளுங்கட்சியை சாடிய ஜெயக்குமார், உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை மோசடி மூலம் திமுக தனது திட்டம் எனக் கூறிவருகிறது என்றும் குற்றம் சாட்டினார். டி.வி.,யை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான் வந்தாரு... போனாரு... ரிப்பீட்டு! என்பது போல வருகிறார் என்று ஜெயக்குமார் முதல்வர் ஸ்டாலினை அப்போது கலாய்த்தார்.

மேலும், பேசிய அவர், “2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 87 வார்டுகளில் கலவரம் நடந்தது. நீதிபதி வாக்கையே யாரோ செலுத்தி விட்டனர். பூத் ஏஜெண்ட்டுகள் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகி மறைமுக தேர்தலுக்கு 10 நாள் இடைவெளி இருப்பதால் கொள்ளையடித்த பணத்தைப் பயன்படுத்தி திமுகவினர் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயல்வார்கள். கட்சியினர் விலை போனால் அது மன்னிக்க முடியாத குற்றம்.” என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad