ஐ.ஐ.டி மாணவர்கள் மாஸ் ப்ளான்; தன்னார்வலர்களுக்கும் அழைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 25, 2022

ஐ.ஐ.டி மாணவர்கள் மாஸ் ப்ளான்; தன்னார்வலர்களுக்கும் அழைப்பு!

சென்னை ஐஐடி மாணவர்கள் எடுத்துள்ள புதிய முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் இன்னும் ஓராண்டுக்குள் பல பெண்களின் சுயசரிதைகளை தானாக உருவாக்குவதற்கும் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.

சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் (ஐஐடி) ராபர்ட் போஷ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் (RBCDSAI), வணிக ஆலோசனை நிறுவனமான சூப்பர்ப்ளூம் ஸ்டூடியோஸ் (SuperBloom Studios) ஆகியவை இணைந்து பாலினத் தரவு இடைவெளியைக் குறைப்பதற்காக 'மறைக்கப்பட்ட குரல்கள் (Hidden Voices) என்ற முன்முயற்சியை தொடங்குகின்றன.

சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் சங்கத்துடன் இணைந்து நடக்கும் இந்த முன்முயற்சி விக்கிபீடியாவில் இருந்து தொடங்குகிறது. இன்னும் ஓராண்டுக்குள் குறிப்பாக அடுத்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்துக்குள் (8 மார்ச் 2023) சிறப்புடைய பல பெண்களின் சுயசரிதைகளை தானாக உருவாக்குவது என நிறுவனர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இதன் மூலம் டிஜிட்டல் ஆதாரங்கள் இடையே பாலின பிரதிநிதித்துவத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சென்னை ஐஐடியின் 3 முன்னாள் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய சூப்பர்ப்ளூம் ஸ்டூடியோஸ் மூன்று கண்டங்களில் இந்த நடைமுறையை கட்டமைத்திருப்பதை 'மறைக்கப்பட்ட குரல்கள்' (Hidden Voices) குழு பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறது.

இந்த முன்முயற்சியில் தன்னார்வத்துடன் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவுசெய்து செய்யலாம். http://hiddenvoices.xyz/ பல்வேறு நுகர்வோர் தொடர்பு சேவைகளின் அடிப்படையை இயற்கை மொழி மாதிரிகள் அதிகளவில் உருவாக்குகின்றன.
இவ்வாறான மாதிரிகள் விக்கிபீடியா உள்ளிட்ட திறந்த இணைய தரவு இணைய தரவு தொகுப்புகளை சார்ந்துள்ளன. பெரும்பாலான தலைப்புகளில் உலக கண்ணோட்டத்தை உருவாக்க விக்கிபீடியா போன்ற டிஜிட்டல் முறையிலான கருவிகளையே பெரும்பாலானோர் சுதந்திரமான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

மனிதன் சார்ந்த செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துவதில் இந்த திட்டம் ஒரு உதாரணமாக அமையும். தானியங்கி மொழி செயலாக்கம் (Automated Language Processing) கணிசமான அளவுக்கு முன்னேறியுள்ள போதிலும், செயற்கை நுண்ணறிவு பிழைகளை உருவாக்கிவிடும் சூழலும் உள்ளது.

குறிப்பாக குறைந்த மக்கள்தொகை உடையவர்களைப் பற்றிய ஆவணங்களை செயலாக்கும்போது ஏற்படும் பிழைகளை இந்தத் திட்டம் தீர்க்க பெரிதும் முயற்சி செய்கிறது.
எனவே செயற்கை நுண்ணறிவு தீர்வுகளின் சாதகமான அம்சங்களை இயன்ற அளவுக்கு உபயோகப்படுத்துவோம். அத்துடன் உயர்தர வெளியீடுகளை உருவாக்க, மனித மேற்பார்வை மற்றும் சரிபார்ப்பை நியாயமான முறையில் பயன்படுத்துவோம். இவ்வாறு பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad