சென்னை அருகே இளம் கபடி வீராங்கனை தற்கொலை..! அதிர்ச்சி அளிக்கும் காரணம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 24, 2022

சென்னை அருகே இளம் கபடி வீராங்கனை தற்கொலை..! அதிர்ச்சி அளிக்கும் காரணம்

மாங்காட்டில் தேசிய அளவிலான கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது இளைய மகள் பானுமதி (25), இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி பல பரிசுகளை வென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டிற்கு வந்த பானுமதி அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பானுமதி உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
முதற்கட்ட தகவல்படி, உரிய வேலை கிடைக்காத காரணத்தால் பானுமதி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad