வெடித்து சிதறிய பட்டாசு..வாயெல்லாம் இனிப்பு; வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு செம வரவேற்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 31, 2022

வெடித்து சிதறிய பட்டாசு..வாயெல்லாம் இனிப்பு; வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு செம வரவேற்பு!

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்த நீதிமன்ற தீர்ப்புக்கு பல வகையான பட்டாசுகளை வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை நெல்லை வக்கீல்கள் பகிர்ந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதி கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய அதிமுக அரசு வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்தது. இதையடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில்‌ சட்டமும் இயற்றப்பட்டது.

இந்த உத்தரவால் பாட்டாளி மக்கள் கட்சியும், பிற சில அமைப்புகளும் உற்சாகம் அடைந்தன. பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் செய்வதாக பாமக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக அரசு அதற்கான அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என உத்தரவிட்டுள்ளது.
வன்னியருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன்பு 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வெடி, வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad